பாலியல் குற்றங்கள் தடுக்க அனைத்தையும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் திருச்சி SRM கல்லூரியில் நடிகை ரோகிணி வேண்டுகோள்

பாலியல் குற்றங்கள் தடுக்க அனைத்தையும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்  திருச்சி SRM கல்லூரியில் நடிகை ரோகிணி வேண்டுகோள்

திருச்சி மாவட்டம், சமயபுரம் இருங்களூர் பகுதியில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  அக்னி சிறகே என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ரோகிணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். விழாவில் என்ஜினீயரிங் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு ரங்கோலி, நடனப்போட்டி, உபயோகம் இல்லாத பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திரைப்பட நடிகை ரோகிணி சிறப்பு பரிசிகளை வழங்கி பாராட்டினார். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது செய்தியாளர்களிடம் திரைப்பட நடிகை ரோகிணி கூறியதாவது ... சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் நீட்சிதான் பாலியல் வன்கொடுமை போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. அடுத்த தலைமுறையினர் பெண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். கூட்டுக் குடும்பங்கள் விலகி  தனிக் குடும்பமாக இருப்பதாலும், குழந்தைகளை பெற்றோர்கள் சிறுவயதில் எப்படி வளர்த்தார்களோ அதேபோல் முதுமையிலும் நாம் அவர்களை பார்த்துக்கொண்டால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. 

சாதி பாகுபாடு காரணமாக தான் வன்கொடுமை அதிகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய புரிதல் வேண்டும் என்று கூறினார். விழாவில் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் மால்முருகன், இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன், டீன் டாக்டர் ரேவதி மற்றும் மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவிகள் பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO