திருச்சியில் அனைத்து இன நாய்கள் கண்காட்சி - முன்பதிவு தொடக்கம்

திருச்சியில் அனைத்து இன நாய்கள் கண்காட்சி - முன்பதிவு தொடக்கம்

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை மற்றும் பெட் கேலக்ஸி இணைந்து அனைத்து இன நாய்கள் கண்காட்சி நடத்துகிறது. வரும் (28.01.2024)ஆம் தேதி திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கூத்தூரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் நாய்களின் அழகு, சிறப்பு அம்சங்கள் மற்றும் கட்டளைக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெறும். இந்த கண்காட்சியில் வெறி நாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் நாய்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ் அவசியம் இல்லை.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நாய்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரம் மற்றும் தொடர்புக்கு செய்தியில் உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision