திருச்சி மாவட்டத்தில் நாளை (15.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (15.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம், பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 15.07.2023 காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கருமண்டபம் மெயின்ரோடு அமுதம் ஹோட்டல் முதல் மாதா கோவில் வரை மற்றும் கல்யாண சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பொறிஞர் P. சண்முக சுந்தரம்., செயற்பொறியாளர், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn