மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

தமிழக காவல்துறை இயக்குநர் / காவல்படை தலைவர் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் M.சத்திய பிரியா, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் பல்வேறு மனுக்களின் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு குறைகளை களைய வேண்டும் என திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் முதல்வரின் முகவரிக்கு கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாநகர காவல் ஆணையர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறும் மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாநகர ஆயுதப்படையில் உள்ள திருமண மண்டபத்தில் காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, புகார் மனுக்கள் பெறப்பட்டு, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து இருதரப்பினருக்கும் உள்ள பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் முதல்வரின் முகவரி மனுக்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனுக்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் தினந்தோறும் நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்கள் என சுமார் 2135 மனுக்களில் 1568 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களின் மீது துரித விசாரணை செய்து, தீர்வு காண அறிவுத்தப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக மூத்த குடிமக்களின் (Senior Citizen) நலனை கருத்தில் கொண்டும், அவர்களது குறைகளை போக்கும் வகையிலும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் (Senior Citizen Petition Mela) நடத்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று(14.07.23)-ந்தேதி காலை 10.00 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினிஹாலில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாமில் 99 மூத்த குடிமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். அவற்றில் முதியோர் உதவி தொகை முறையாக வரவில்லை என்றும், வீடுகள் ஒதுக்கிதர கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வந்த மனுக்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்ககோரி அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது அல்லாத இதர மனுக்கள் அந்தந்த திருச்சி மாநகர காவல் சரக அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பு பெட்டிசன் மேளா மற்றும் புகார் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்து ள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn