திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் பூவாளூர் 110/33-11கிவோ துணையின் நிலையத்தில் நாளை (31.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணையின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் பெறும் இலால்குடி நகர் பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர் மற்றும் பூவளூர், நன்னிமங்கலம். பின்னவாசல், மனக்கால், கொப்பாளி, வழுதியூர்,

நடராஜடரம், படுகை, ஆதிக்குடி, கொள்ளைக்குடி, சாத்தாக்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜூங்கமராஜபுரம், மங்கம்மான்புரம், குறிச்சி, பருத்திக்காள், காட்டுர், கொந்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளலூர், பெருவளநல்லூர், இடக்கிமக்கலம்,

நஞ்சை சங்கேத்தி, புஞ்சை சங்கேத்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (31.10.2023) காலை 09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், லால்குடி கோட்டம், செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

இதே போல் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (31.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், 2 கரிய மாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை,

வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக் குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்பட்டி, பூணாம்பாளையம், திருவெள்ளரை,

ராசாம்பாலையம், சாலக்காடு மற்றும் புலிவலம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லாயம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (31.10.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதே போல் தொட்டியம் துணை மின் நிலையத்தில் நாளை (31.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி தொட்டியம், அரங்கூர் காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று முசிறி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_visio