திருச்சியில் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் இலக்கியத் திருவிழா

திருச்சியில் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் இலக்கியத் திருவிழா

திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள ராம்ஜி நகரில் செயல்பட்டு வரும்  தி இந்தியன் பப்ளிக் பள்ளி  வளாகத்தில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. பிப்ரவரி (11,12/02/2023) தேதிகளில் நடைபெறும் இவ்விழாவில் கலை இலக்கியவாதிகளுக்கும், கல்வியாளர்களுக்கும்

சமூக சேவைகள் செய்பவர்களுக்கும் விருதளிப்பு நிகழ்வும் கதைகள் கூறும் நிகழ்வு, இலக்கியம் சார்ந்த விளையாட்டுகள், கதைகள் படித்தல் ,  கவிதைகள் கூறுதல், ஆயிரக்கணக்கான மாணவர்கள்,  பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற உள்ளனர்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்களின் நூல்களுக்கான புத்தக அரங்கு, குழந்தைகளுக்கான புத்தகக் கடைகள்,  துணிக்கடைகள், குழந்தைகளுக்கான ஓவியம் பயிற்சி கடைகள், பெண்களின் அழகு சாதன பொருட்களுக்கான கடைகள், உணவகங்கள், போன்றவை இடம்பெறுகின்றன.

மாறுவேடம் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறுபவருக்கு மடிக்கணினி பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கும் மற்றும் பதிவு செய்யவும். தொடர்பு எண் : 7339111333 / 7339111444.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn