திருச்சி மாநகரில் நாளை (14.03.2023) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (14.03.2023) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது.

இதில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினா் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (14.03.2023) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விபரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn