திருச்சியில் வரும் 13-ஆம் தேதி கழிவு வாகனங்கள் பொது ஏலம்

திருச்சியில் வரும்  13-ஆம் தேதி கழிவு வாகனங்கள் பொது ஏலம்

திருச்சி மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 16 கழிவு வாகனங்கள் வருகிற ஏப்ரல் 13ம் தேதி பொது ஏலம் நடைபெறுகிறது .

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவுசெய்யப்பட்ட 3 இலகு ரக நான்குசக்கர வாகனம் (LMV) மற்றும் 13 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 13.04.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 05.04.2022 முதல் 12.04.2022-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

 மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 13.04.2022-ம்தேதி காலை 8மணிமுதல் 10 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO