திருச்சியில் நாளை (06.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (06.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

33 கே.வி. E.B.ரோடு துணை மின் நிலையத்தில் (06.08.2024) (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு,

பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும்

உக்கடை ஆகிய பகுதிகளில் (06.08.2024) (செவ்வாய் கிழமை) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன், தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி கே.சாத்தனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (06.98.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை கேகே. நகர், இந்தியன் பேங்க் காலனி. காஜாமலை காலனி, எஸ்எம் இஎஸ்இ காலனி, சுந்தர்நகர், ஐயப்ப நகர், எல்ஐசி காலனி, பழனி நகர், முல்லை நகர்,

ஓலையூர், மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்வி எஸ் நகர், ஒயர்லஸ் ரோடு, செம்பட்டு, கே.சாத்தனுார், வடுகப்பட்டி, ஆர்எஸ் புரம், டிஎஸ்என் அவென்யு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision