திருச்சி உணவகத்தில் முட்டை விற்ற இருவருக்கு ஜெயில்

Jail eggs Trichy restaurant

திருச்சி உணவகத்தில் முட்டை விற்ற இருவருக்கு ஜெயில்

தமிழக அரசால் பள்ளிக்கூடம் மாணவருக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையை துறையூர் பகுதியில் இயங்கி வந்த ஹோட்டல் ரத்னா உணவகத்தில் விற்பனை செய்வதை தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் மோகன் தலைமையில் அந்த கடையிலிருந்து 113 முட்டைகள் பறிமுதல் செய்ததோடு உணவு பாதுகாப்புத் துறையினர் உணவகத்திற்க்கு சீல் வைத்தனர்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை கடைக்கு விற்ற புகாரில் திருச்சி மாவட்டம் மதுராபுரி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி கைது.

அரிசி, பருப்பு, முட்டை, எண்ணெய் ஆகியவற்றை வெளி சந்தையில் விற்றது தெரிய வந்ததால் வசந்தகுமாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஹோட்டல் உரிமையாளர் ரத்தினம் இருவர் மீதும் 379 திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை

வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/IpuTLRgmGq

o0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision