மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய இளைஞர் லாரி ஏறி பலி!

மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய இளைஞர் லாரி ஏறி பலி!

தொப்பம்பட்டியை சேர்ந்த அஜித் குமார்(28), திருச்சி ஏர்போர்ட் அருகே சாலை விபத்தில் பலியானர்.

Advertisement

அஜித்குமார் திருச்சி ஏர்போர்ட் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த பொழுது சாலையின் குறுக்கே மாடு வந்ததால், இருசக்கர மோட்டார் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் கீழே விழுந்தார். 

Advertisement

அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கீழே விழுந்தவரின் தலையில் ஏறியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அஜித்குமார் பலியானார். தொடர்ந்து காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.