மது அருந்தும் போது ஏற்பட்ட சண்டை‌ - நண்பனை கொலை செய்த குடிகார நண்பன்!!

மது அருந்தும் போது ஏற்பட்ட சண்டை‌ -  நண்பனை கொலை செய்த குடிகார நண்பன்!!

திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த கனகராஜூரும், பொன்மலை மலையடிவாரத்தைச் சேர்ந்த சம்பத்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து பொன்மலை பகுதியிலுள்ள காலியாக உள்ள ரயில்வே பழைய குடியிருப்பில் மது அருந்தி கொண்டிருந்தனர். 

Advertisement

அப்போது இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திடீரென சம்பத்குமார் ஆத்திரத்தில் கனகராஜை தள்ளி விட்டு கல்லால் தாக்கியதில் கனகராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் கிடந்தார். 

பின்னர் சம்பத்குமார் பொன்மலை போலீசில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்த போது கனகராஜ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement