மணப்பாறையில் லாட்டரி கும்பல் கூண்டோடு சிக்கியது!

மணப்பாறையில் லாட்டரி கும்பல் கூண்டோடு சிக்கியது!

மணப்பாறையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த கும்பலை எஸ்.பி.யின் தனிப்படை டிஎஸ்பி பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட போலீஸார்  இன்று கைது செய்தனர். 
13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 7 பேர் சிக்கியதுடன்,  லாட்டரி சீட்டு அச்சடிக்க பயன்படுத்திய   10 செல்போன்,2 டூவீலர்கள்,  கம்ப்யூட்டர் பிரிண்டர் உள்ளிட்டவை பறிமுதல்.மேலும் ரூ. 8 ஆயிரத்து 120ரூபாய் பணம் பறிமுதல்.

Advertisement

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை டிஎஸ்பி பால்சுதர்  மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார்

Advertisement

10 நாட்களாக தீவிரமாக  கண்காணித்து நடத்திய  அதிரடி ரெய்டில் சிக்கினர் லாட்டரி கும்பல். கைதான 5 பேர்களும் மொத்த லாட்டரி வியாபாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.