திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (07.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (07.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி 33/11கே.வி. E.B.ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (07.10.2023) (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி,

N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி (ஒரு பகுதி), மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை (07.10.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர், பொறிஞர்.பா.சணிமுகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (07.10.2023)ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை சமயபுரம், மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி,

கரியமாணிக்கம், பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மாருதிநகர், தாளக்குடி, கீரமங்கலம், அகிலாண்டபுரம், கூத்தூர், நொச்சியம், பாச்சூர், திருவாசி, , பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision