திருச்சி மாநகரில் நாளை (24.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (24.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி வரகனேரி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (24.01.2023) செவ்வாய் கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை திருச்சி மாநாகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர்,

செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகளேரி, பெரியார் நகர், பிச்சைதகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், கீழ்புதூர், படையாச்சிதெரு, தாமநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, நுரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிநகர், வள்ளுவர் நகர், அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு,

பாத்திமா தெரு, அன்புருகா, பெரியாளையம், பிள்ளைமாநாள், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு, ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி தென்னூர் மின்வாரிய நகரியம் இயக்கலும் காத்தலும், செயற்பொறியாளர் பொறிஞர்.பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5#

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn