மீண்டும் அட்டூழியம் - செய்திதாள் நிறுவன ஊழியரை வெட்டிய வழிப்பறி ரவுடிகள்

மீண்டும் அட்டூழியம் - செய்திதாள் நிறுவன ஊழியரை வெட்டிய வழிப்பறி ரவுடிகள்

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள அம்பிகாபுரம் சாலைகள் (தினமணி ) செய்தித்தாள் அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பிள்ளை விளையைச் சேர்ந்த மகாராஜா (50) என்பவர் மிஷின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு மீண்டும் அச்சகத்துக்கு செல்லும் வழியில் டூவீலரில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் அவரை மறித்து அவரிடம் செல்போன் கேட்டு மிரட்ட அவர் தர மறுத்ததற்கு மகாராஜாவை கத்தியால் வயிற்றில் கிழித்து விட்டு தப்பி ஓடினர்.

தொடர்ந்து இவர் காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து மகாராஜா அளித்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision