குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

திருச்சி மாநகரம், உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிராஜ் கடந்த 01.03.2021 அன்று காலை 09.00 மணியளவில் குழுமாயிகரை கல்லாங்காடு வளைவில் அருகே ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், சமயபுரம் வெங்கங்குடியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பதும், அவரை சோதனை செய்ததில் அவரிடம் சுமார் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட பிரவீன்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகள் என திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, மேற்படி பிரவீன்குமார் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் உறையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பிரவீன்குமார் இன்று குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr