திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தை ஓட்டிய வந்த டிரைவருக்கு நெஞ்சுவலி - பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்!!

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தை ஓட்டிய வந்த டிரைவருக்கு நெஞ்சுவலி - பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்!!

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே பாத்திமா நகர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. திருச்சி முதல் இலுப்பூர் அன்னவாசல் வரை தினமும் இந்த தனியார் பேருந்து சென்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று காலை திருச்சியில் இருந்து அன்னவாசல் செல்வதற்காக பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்த பேருந்தினை இலுப்பூர் பூனைக்குத்திப்பட்டி டிரைவர் ஆனந்த் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பாத்திமா நகர் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது டிரைவர் ஆனந்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக டிரைவர் அருகிலிருந்த ஃபிளாட் பகுதியில் பேருந்து பாய்ந்து சென்று நிறுத்தினார். இதில் டிரைவர் ஆனந்த் நெஞ்சுவலியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டாலும் கூட சுதாரித்து பேருந்தை அருகிலிருந்த காலி நிலத்திற்குள் விட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்தார். நல்லவேளையாக அச்சமயம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr