தீ குளிக்க முயன்ற பெண் சிறையில் அடைப்பு

தீ குளிக்க முயன்ற பெண் சிறையில் அடைப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உடையான்பட்டியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக தன் கணவர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டுமென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் எச்சரித்த போதும் மீறி தற்கொலைக்கு முயன்ர்.

பின்னர்  அருகில் இருந்த பெண் காவலர் உதவியுடன் அவரை பிடித்து கே.கே.நகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து பணியில் இருந்த பெண் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு முயல்தல் மற்றும் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr