7-ம் வகுப்பு மாணவியை பட்டபகலில் கடத்த முயற்சி - திருச்சியில் பரபரப்பு

7-ம் வகுப்பு மாணவியை பட்டபகலில் கடத்த முயற்சி - திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார், இவருடைய மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் காலை அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க நபர் மேற்படிப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சிறுமியை தூக்கி செல்ல முற்பட்டுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்த நிலையில் மர்ம நபர் காம்பவுண்ட் சுவரை தாண்டி இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision