விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு திருச்சியில் பேரணி

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு திருச்சியில் பேரணி

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பேரணி தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் இணைந்து நடத்தினர். பேரணியை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிலை அலுவலர் கர்ணன் காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் அந்தோணி முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்தது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும்

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இரு சக்கர வாகனத்தில் காவல்துறையினர் மற்றும் தீட்டெடுப்பு நிலையத்தினர் பேரணி சென்றனர். பேரணி தீயணைப்பு நிலையத்தில் துவங்கி தா.பேட்டை ரோடு, கைகாட்டி, துறையூர் ரோடு, பைபாஸ் சாலை, வழியாக தீயணைப்பு நிலையத்தில் முடிவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision