பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக தனி பெறுமான்மையாக அமோக வெற்றி பெற்றுள்ளது.

அதனை கொண்டாடும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையை முன்பு பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சம்பத்குமார் மற்றும் நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராதாகிருஷ்ணன், பி எஸ் என் எல் பழனிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision