வாழைத்தார் லோடு ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

வாழைத்தார் லோடு ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் மஞ்சமேடு, ஸ்ரீராம சமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் வாழை தார்கள் சத்தியமங்கலம் பெங்களூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28) என்பவர் வாழைத்தார் லோடு ஏற்றுவதற்காக வேனை ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் காட்டுப்புத்தூர் பகுதியில் வாழைத்தாறுகளை ஏற்றுக்கொண்டு மற்றொரு பகுதியில் லோடு ஏற்றுவதற்காக கூலிதொழிலாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது காட்டுப்புத்தூர் அருகே மாவலிபட்டியில் சாலையோர வளைவில் சென்றபோது எதிரே அரசு பேருந்து வந்ததால் எதிர்பாராத விதமாக வாழைத்தார் லோடு ஏற்றி வந்த வேன் அருகில் இருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் மின் கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்தது. உடனடியாக மின்சாரம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மின் கம்பத்தை சீரமைத்தனர். விபத்துக்குள்ளான வேன் ஜேசிபி எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. கூலிதொழிலாளர்கள் வேனில் பின்னால் அமர்ந்து சென்றதால் வேன் கவிழ்ந்த போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision