மோதல் - போலீஸ்காரர் உள்பட 4 பேர் படுகாயம் - திருடுபோன பைக்

மோதல் - போலீஸ்காரர் உள்பட 4 பேர் படுகாயம் - திருடுபோன பைக்

திருச்சி மாவட்டம் சமயபுரம் சேனியா கல்லுக்குடியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (30). இவர் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி அன்று மாமனார் வீட்டிற்கு சென்ற அவர், மேக்குடி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருச்சி உறையூர் கோணக்கரை ரோட்டில்சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உறையூரில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சண்முகசுந்தரம் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதின. இதில் சண்முகசுந்தரம் மற்றும் எதிரே வந்த சண்முகம், கமால், ஹரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்ததில், விபத்து நடந்த இடத்தில் இரண்டு பேரின் மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதை யார் எடுத்துச் சென்றார் என்பது தெரியவில்லை. இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision