திருச்சியில் பாதயாத்திரை நடத்த முயன்ற இந்து எழுச்சி பேரவையினரை தடுத்து நிறுத்திய போலீசார்

திருச்சியில் பாதயாத்திரை நடத்த முயன்ற இந்து எழுச்சி பேரவையினரை தடுத்து நிறுத்திய போலீசார்

தொடர்ந்து விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி,இந்து எழுச்சி பேரவை சார்பில், பாதயாத்திரை நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று பிற்பகல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, மாநிலத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் பேரணியாகச் செல்ல முயன்றனர். இந்து எழுச்சி பேரவையின் கண்டன பாத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனால், நீதிமன்ற அனுமதி பெற்று பாதையாத்திரை நடத்தப்படும் என்று மாநில தலைவர் சந்தோஷ் குமார் அறிவித்தார். இதையடுத்து பாதயாத்திரை செல்ல முயன்ற இந்து எழுச்சி பேரவையினர் கலைந்து சென்றனர்.