திருச்சியில் 1 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் 1 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் தனது தொடை பகுதியில் (knee cap ) நீ கேப் போன்று அணிந்து அதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயனியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பயணி கடத்தி வந்த மொத்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்தி 13 ஆயிரத்து 257 ஆகும். அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 1 கிலோ 423.500 கிராம் ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision