சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள்

சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள்

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வே சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான அணிவகுப்பு, கேட் வே, பேண்டு, முகத்தில் ஓவியம் வரைதல், மெகந்தி, உணவு சமைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதில் திருச்சி, பொன்மலை, சேலம், மதுரை, சென்னை சென்ட்ரல், சென்னை ஐசிஎப், சென்னை பெரம்பூர், பாலக்காடு தெற்கு மத்திய இரயில்வே மற்றும் தென்னக ரயில்வே சார்ந்த 8 அணிகள், மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் அகர்வால், தென்னக ரயில்வே பெண்கள் நலச்சங்க தலைவர் உமா அகர்வால், சாரணர் இயக்க மாநில முதன்மை ஆணையர் உதய்ரெட்டி, பொன்மலை பணிமனையில் மேலாளர் ஷாமதார் ராம் ஆகியோர் கிரேடு முறையில் பரிசுகள் வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO