பயிர் கடன் தள்ளுபடி - திருச்சியில் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!!

பயிர் கடன் தள்ளுபடி - திருச்சியில் பட்டாசு  வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!!

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வருவார்.

Advertisement

அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டறவு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

Advertisement

இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பதும் இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி அ.தி.மு.க அரசு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனைத் தொடர்ந்து பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்று திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பாக பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.