அதிமுக நகர்மன்ற மன்ற தலைவர் ராஜினாமா - பரபரப்பு

அதிமுக நகர்மன்ற மன்ற தலைவர் ராஜினாமா - பரபரப்பு

மணப்பாறை நகராட்சிக்கு நடந்து முடிந்த 7-வது நகர்மன்ற தலைவர் தேர்தலில் 11 வார்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்து 15 வாக்குகள் பெற்று அதிமுக தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 18-வது வார்டு உறுப்பினர் பா.சுதா வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். அதை தொடர்ந்து துணைத்தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறாத நிலையில், நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை.

கடந்த 3 மாதங்களாக இந்நிலை நீடித்து வந்த நிலையில் தனது நகர்மன்ற தலைவர் பதவியை பா.சுதா இன்று இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் தற்போது அளித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO