கல்லூரிகள் திறப்பு - திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகளுக்கு கொரோனா!!

கல்லூரிகள் திறப்பு - திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகளுக்கு கொரோனா!!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் செயல்படாத நிலையில் அரசு அறிவித்த தளர்வுகளின் படி இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது.

Advertisement

இந்நிலையில் திருச்சியில் இன்று கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதில் கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியும் இன்று செயல்பட தொடங்கியது.

Advertisement

இதில் கடந்த 1- ம் தேதி முதல் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்லூரி தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கடந்த வியாழன் அன்று கொரோனா சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதில் மூன்று மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது கல்லூரி 8 மாத காலத்திற்குப் பிறகு வழக்கம் போல் செயல்படுகிறது