புனித வெள்ளியன்று உயிர் துறக்க வேண்டும் என்று ஜெபத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்

புனித வெள்ளியன்று உயிர் துறக்க வேண்டும் என்று ஜெபத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேல மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம்மா (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரின் அக்கா மகளான மார்க்ரைட் (30) ஆகிய இருவரும் புனித வெள்ளி அன்று உயிர் துறக்க வேண்டும் என்று கடந்த 40 நாட்களாக அவரது மாடி வீட்டில் தன்னந்தனியாக இருவரும் உணவு அருந்தாமல் ஜெபம் செய்து வந்துள்ளார்.

மேலும் ஆண்டவரே நாங்கள் அடையப் போகிறோம் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் இருந்துள்ளனர். மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த வீட்டிற்கு போலீசார் வந்து பார்த்தபோது குளிக்காமல் அழுக்கு உடையும் மலம் கழித்தவாறு இருந்துள்ளனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுக்குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO