டிக் டாக்கில் நண்பராகி வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியை பாலியம் வன்மம் செய்த இளைஞர் கைது!!

டிக் டாக்கில் நண்பராகி  வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியை பாலியம் வன்மம் செய்த இளைஞர் கைது!!

டிக்டாக்கில் அறிமுகமான புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் தன்னை பாலியல் வன்மம் செய்ததாக கூறியதனைத் தொடர்ந்து லால்குடிஅனைத்து மகளிர் போலீஸôர் வழக்கு பதிந்து இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள காலனித்தெருவைச் சேர்ந்தவர் கவியரசனின் 15 வயது மகள் மற்றும் சக்திவேல் மகள் அகல்யா(15). இருவரும் மண்ணச்சநல்லூர் அரசு மேனிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் வெங்கடேஷ் (15). திருச்சி நேஷனல் மேனிப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மூவரும் கடந்த 6 ம் தேதி காலை 9.30 மணிக்கு அவரவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

Advertisement

மூவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் காணாத நிலையில் மூவரது பெற்றோரும் சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார்  வழக்கு பதிந்து மூவரையும் தேடி வந்தனர். அப்போது மாயனமான மூவரும் கோயம்புத்தூர் அருகே மேட்டுபாளையம் பகுதியிலிருந்து ஊட்டிக்கு செல்ல முயன்ற போது ஆதார் அட்டை அல்லது இ பாஸ் வேண்டுமென பேருந்தில் கேட்டுள்ளனர். இது இல்லாததால் கவியரசன் மகள் அவரது தாய்க்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

மாணவியின் தாய் சமயபுரம் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீஸார் மேட்டுப்பாளையம் சென்று மூவரையும் மீட்டு அவர்களது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். அப்போது மாணவி அவரது தாயிடம் டிக் டாக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் மாரிமுத்து ( 20) என்பவர் நட்பானதாகவும், அவர் அழைத்ததின் பேரில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கோயம்புத்தூரில் உள்ள ஒரு இடத்தில் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்மம் செய்த கூறி அழுதுள்ளார்.

Advertisement

 இச்சம்பவம் குறித்து மாணவியின் தாய் தேவி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இளைஞர் மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் மாரிமுத்துவை லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.