திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திருச்சி கன்டோன்மென்ட் போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அரசு போக்குவரத்து கழகங்களின் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுகால பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், 5 வருடங்களுக்கு மேலாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் 85 ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களில் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர் என்றும், இனியும் காலம் கடத்தாமல் ஊதிய ஒப்பந்தப் படி அகவிலைப்படி நிலுவை யுடன் ஓய்வூதியத்தில் இணைத்து உயர்வு வழங்க வேண்டும் எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிகழ்வில் பேரவை பொதுச் செயலாளர் மருதமுத்து, செயலாளர் ஜெயச்சந்திரன், பேரவைத் தலைவர் ராஜேந்திரன், செல்வராசு, திருநாவுக்கரசு, பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.