திருச்சி மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்ட வருவாய் நிர்வாக நலன் கருதி 9 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை அகல ரயில் பாதை அலகு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சண்முகப்பிரியா முசிரிக்கும், துறையூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சேக்கிழார் மணப்பாறைக்கும், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் கீதாராணி மருங்காபுரிக்கும்

முசிறி தாசில்தார் சந்திரதேவநாதன் முசிறி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், முசிறி உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் சந்திரகுமார் துறையூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மணப்பாறை தாசில்தார் லஜபதிராய் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், மருங்காபுரி தாசில்தார் ஜெயப்பிரகாசம் விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அலகு 2 தனி தாசில்தாராகவும்

திருச்சி தாசில்தார் மகாலட்சுமி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சி தனி தாசில்தாராகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சி தனி தாசில்தார் பன்னீர்செல்வம் காலியாக உள்ள சமூக பாதுகாப்பு திட்டம் லால்குடி தனி தாசில்தாராக இடமாறுதல் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn