வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் - குழந்தைகள் உற்சாகம்

வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் - குழந்தைகள் உற்சாகம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தற்காப்பு வீர விளையாட்டுகள் கலையான சிலம்பக் கலைகளை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முன்னோடி சிலம்ப ஆசான்கள் ஜெயக்குமார் மற்றும் பரணிதரன் தலைமையில்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த், முன்னிலையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்ட பல்வேறு வகையான சிலம்ப வித்தைகளை வெளிக் கொணரும் பாரம்பரியக் கலை விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பாரம்பரிய சிலம்பக் கலைகளான கம்பு சுற்றுதல், கல்லன் கம்பு, சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம், நெடுங்கம்பு சுற்றுதல், நடுகம்பு சுற்றுதல்,

சில வீச்சு, பொடிகுச்சி, செடிகுச்சி, சிலுவை போடு ஆகிய சிலம்பாட்டுக் கலைகள் பாரம்பரிய விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளைச் செய்ய முடிந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு அம்சமாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம் மற்றும் கம்பு சுற்றுதல் வித்தைகளை செய்து காட்டினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் சிலம்பக் கம்பு சுற்றும் கலையை செய்து காட்டினார்.

தமிழர்களின் தற்காப்பு பாரம்பரிய கலையின் பெருமையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சிலம்பக் கலை வித்தையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரியக் கலை நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டன. விழாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு நேரு யுவகேந்திரா மையத்தின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn