தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாகசம் - 2 இளைஞர்கள் கைது

தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாகசம் - 2 இளைஞர்கள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுமருதூர் மேம்பாலம் அருகே. கடந்த 22.06.24 அன்று 1.பரணிதரன் (19), த.பெ.ஆறுமுகம், 2.தேவனரசன் (18) த.பெ.டேவிட் பழனிச்சாமி மற்றும்

3.செபஸ்டின் டேனியல் (18), த.பெ.பால்ராஜ், ஆகியோர் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தைச் தூக்கிகொண்டு சாகசம் செய்து. அபாயகரமாக ஓட்டிச் சென்ற வீடீயோ காட்சியானது Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இதுக்குறித்து சமயபுரம் காவல்நிலையத்தில் குற்ற எண் 5. 191/24, U/s 279, 290 IPC r/w 183 MV-ன் படி மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அன்றைய தினம் (2206.24)/மாலை, மேற்படி எதிரிகளில் பரணிதரன் (19) மற்றும் செபஸ்டின் டேனியல் (18) ஆகியோர்களை கைது செய்து. அவர்கள் சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் (Yamaha R15 TN-81-H-3182. Yamaha MT-15, TN-55-BK-7008 Yamaha MT-15, TN-81-H-3145) பறிமுதல் செய்யப்பட்டது.

இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் : 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision