காவலர் உடற்தகுதி தேர்வில் சந்தேகம் - திருச்சியில் மீண்டும் நடக்கும் உடற்தகுதி தேர்வு

காவலர் உடற்தகுதி தேர்வில் சந்தேகம் - திருச்சியில் மீண்டும் நடக்கும் உடற்தகுதி தேர்வு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த ஜூலை  26-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில்  உடற்தகுதி அளவீட்டில் சந்தேகம் உள்ளதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களின் உடற்தகுதியை மீண்டும் அளக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல கொரோனா காரணமாக உடற்தகுதி தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கும்
மறு உடற்தகுதி தேர்வு இன்று திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 146 ஆண்களும், 29 பெண்கள், 1 திருநங்கை உட்பட 183 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா காரணமாக 113 நபர்களும், உடற்தகுதி தேர்வில் குளறுபடி உள்ளதாக வழக்கு தொடர்ந்து மறு உடல் அளவீட்டிற்க்காக 111 நபர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு நாளை உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தடகள தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த யாழினி என்ற திருநங்கை கடந்த உடற்தகுதித் தேர்வில் இதர பிற்ப்படுத்தப்பட்ட பட்டியலின் படி 158.7 உயரம் மட்டுமே இருப்பதால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கைகளுக்கு பட்டியலினத்தவர்களுக்கு அளிக்கப்படும் வயது தளர்வை போன்று உயரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அவருக்கு பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் உயர சலுகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருநங்கை யாழினியும் மீண்டும் இன்று உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn