திருச்சியில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை

திருச்சியில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை

 திருச்சி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சார்பில் திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கிடங்கில் (ஐஓசி) வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில், வெடிகுண்டு நிபுணரும், திருச்சி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளருமான ஏ. எட்வர்டு தலைமையிலான போலீஸார், இந்தியன் ஆயில் கிடங்கு (ஐஓசி) வளாகத்தில் வெடிகுண்டு வதந்தி பரப்புதல் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.

 முதலாவது, ஐஓசி வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். 

தொடர்ந்து, அங்குலம் அங்குலமாக கிடங்கு பகுதி முழுவதையும் சோதனையிட்டு, போலியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டினை இவிடி, என்எல்ஜெடி, எஸ்எச்எம்டி உள்ளிட்ட மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு கண்டுபிடித்தனர்.

 வெடிகுண்டினை பாதுகாப்பாக எடுத்துச் சென்று, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து செயலிழக்கச் செய்தனர்

 நடந்த சோதனைகளையும், வெடிகுண்டு கண்டறிந்து, செயலிழக்கச் செய்ததையும் அங்கிருந்த ஊழியர்களிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

 வெடிகுண்டு இருந்தாலோ, வதந்தி பரப்பினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.இதில், ஐஓசி மேலாளர் சஞ்சீவி, பாதுகாப்பு அதிகாரி அஜ்மல் மற்றும் ஐஓசி ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision