ஜவுளிகளை திருடும் சிசிடிவி காட்சி 

ஜவுளிகளை திருடும் சிசிடிவி காட்சி 

ஜவுளி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் ஜவுளிகளை திருடும் சிசிடிவி காட்சி திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவர் மேலவாளாடி அருகே பனையடியான் கோயில் எதிரே  கோகிலன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் வேலை நேரம் முடிந்ததும் இரவு கடையை பூட்டி விட்டு சென்ற ஆனந்த் குமார். மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது இரும்பு சட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ. 1 லட்சம்  ரொக்கம்  மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள உயர்தர ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது இந்த திருட்டு சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌