தோட்டக்கலைத் துறையின் சார்பில் நறுமண பயிர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

தோட்டக்கலைத் துறையின் சார்பில் நறுமண பயிர்கள் மூலம்  தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நறுமண பயிர்களான வெந்தயம், கசகசா மற்றும் கருஞ்சீரகத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு இலட்சினையை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்,பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) ததினேஷ் குமார்,ஆகியோர் இன்று (08.04.2024) பார்வையிட்டனர்.

 

அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ந.சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.சரவணன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision