திருச்சி விமான நிலையத்தில் 48 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 48 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மதுரையை சேர்ந்த ராஜா (23) என்ற பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது 1010 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48.5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தங்கத்தை கடத்தி வந்த ராஜாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP