சமயபுரம் கடைவீதி வியாபாரிகள் சார்பில் அம்மனுக்கு மூன்றாவது வார பூச்சொரிதல்

சமயபுரம் கடைவீதி வியாபாரிகள் சார்பில் அம்மனுக்கு மூன்றாவது வார பூச்சொரிதல்

திருச்சி சமயபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் 3 வது வார பூச்செரிதல் விழா முன்னிட்டு சமயபுரம் கடைவீதி வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் சார்பில் 64 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா மேளதாளம் முழங்க, குதிரை நடனத்துடன், பெண்கள் பறை இசைத்து நடனத்துடன், பம்பை,  செண்டா மேளம் முழங்க, யானை மீது பூக்கூடை வைத்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

சமயபுரம் தேங்காய் பழக்கடை மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 வார பூச்செரிதல் விழாவில் மிக பிரம்மாண்டமான முறையில் டிராக்டர் வாகனத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாகனத்தில் கருப்புசாமி, சமயபுரம் மாரியம்மன், காளியம்மன் ஆகிய சுவாமிகளின் திருவுருவ சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கோவில் திருமண மண்டபத்திலிருந்து  தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் வழிபாட்டுடன் வலம் வந்து முன் வாசல் வழியாக அம்மனுக்கு பூத்தட்டுகளை தூக்கி சுமந்து கொண்டு மூலவர் அம்மனுக்கு பூக்களை சாத்தி  வழிபாடு செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision