திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கிடையேயான  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கிடையேயான  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வட்டார அளவிலான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசுப் பள்ளிகளுக்கிடையேயான  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சோபனபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், பி.மேட்டூர், உப்பிலியபுரம், சோபனபுரம், முருங்கப்பட்டி, மங்கப்பட்டி,

புதூர், நாகநல்லூர், கொப்பம்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, நெட்டவேலம்பட்டி, டி.பாதர்பேட்டை, கீழப்பட்டி மற்றும் டாப்செங்காட்டுப்பட்டி ஆகிய பள்ளிகளுக்கிடையேயான 6ம் வகுப்பு முதல் 12ம் வரை பயிலும், 220 மாணவர்களுக்கிடையே நடந்த போட்டியில், சீனியர் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பச்சபெருமாள்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும்,

ஜூனியருக்கிடையேயான போட்டியில் கொப்பம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO