கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலைய பொன்மலைப்பட்டி மயூரா பேக்கரி முன்பு கடந்த 15.09.21ஆம் தேதி எல்லைக்குட்பட்ட சின்ராஜ் (24) என்பவரை முன்பகை காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் @ அலெக்ஸ்சாண்டர் (26) மற்றும் சரத் @ ரத்தினசாமி (22) ஆகியோர் கொலை செய்தது தொடர்பாக சக்திவேல் (20) என்பவர் பொன்மலை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்தும், மேற்படி வழக்கின் எதிரிகளை கடந்த 18.09.21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

விசாரணையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட  குற்றவாளி அலெக்ஸ்சாண்டர் (26) என்பவர் மீது திருச்சி மாநகரில் 04 வழக்குகள் பதிவு செய்தும், பல்வேறு காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மேற்படி  அலெக்ஸ்சாண்டர் (26) மற்றும் சரத் ரத்தினசாமி(22) ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதால், நடவடிக்கையை தடுக்கும்
 பொருட்டும் பொன்மலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார். 

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அலெக்ஸ் @ அலெக்ஸ்சாண்டர் மற்றும் சரத் @ ரத்தினசாமி ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதீயான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn