திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்-கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கதிரவன் அண்ணாமலை மணிராஜ்.
தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். திருச்சி மண்டலத்தில் 41
தொகுதிகள் உள்ளது தற்போதைய சூழலில் 41 தொகுதிகளிலும் திமுக தான் முழுமையாக வெற்றி பெறும் என்கிற நிலை உள்ளது.கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், கூட்டணி கட்சியினரின்
செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அனைத்தும் சரி செய்யும் வரை வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision