பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம்

பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம்

பெருந்தலைவர் கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் பேரவை தலைவர் கள்ளிக்குடி குமார் தலைமையில் திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள

அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் ரயில் சரவணன், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, நிர்வாகிகள் பாலக்கரை மார்க்கெட் மாரியப்பன், முருகன், திம்மை செந்தில் குமார், உரந்தை செல்வம்,

கிழக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரபிக், கலை பிரிவு சண்முகம், சிந்தை வினோத், ஸ்ரீராம், மன்சூர், பரமசிவம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn