4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - திருச்சி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - திருச்சி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

திருச்சி ஸ்ரீரங்கம் கிருஷ் ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப் (22). இவர் கடந்த 2021-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்குள்ள கோவில் அருகே விளையாடிக் கொண்டு இருந்த 4 வயது சிறுமியை பிரதீப் கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

இதில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக பிரதீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாலியல் தொல்லை குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராத தொகையில் ரூ.50 ஆயி ரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து போலீசார், பிரதீப்பை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால் பிரதீப் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision