திருச்சி தில்லை நகர் சாலையில் மிகவும் மோசமான நிலையில் மழை நீர் வடிகால்கள்

திருச்சி தில்லை நகர் சாலையில் மிகவும் மோசமான நிலையில் மழை நீர் வடிகால்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு தில்லை நகர் மெயின் ரோட்டில் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் வாட்டம் இல்லாமல் உள்ளது.

முற்றிலுமாக மழை நீர் வடிகால்களை இடித்து வாட்டத்துடன் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக கட்டப்பட வேண்டும் . மழைக்காலங்களில் மக்கள் இருபுறமும் நடந்து செல்லவே முடியாத சூழ்நிலை உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்

ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 22 ஆவது வார்டு மற்றும் மேற்கு பகுதி குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என்று  திருச்சிராப்பள்ளி  மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision