இலவச திறன் பயிற்சி திட்டத்தின் பட்டமளிப்பு விழா

இலவச திறன் பயிற்சி திட்டத்தின் பட்டமளிப்பு விழா

ஒமேகா சென்டர் ஆஃப் ஹோப் பயிற்ச்சி மையத்தில் கடந்த மாதங்களில் பயிற்ச்சி முடித்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு சான்றளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்,திருச்சிராப்பள்ளி ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் டேலண்ட் மேனேஜ்மென்ட் இயக்குநர் ஆண்டனி ஈப்பன் முதன்மை அதிகாரியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

ஒமேகாவைச் சேர்ந்த பூர்ணிமா, அசோக் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கூடுதலாக, Hr TEkkessence, ஸ்னிப்ஸ் சொல்யூஷன் HR, GM சொல்யூசன் HR மற்றும் RSV டெக்னோ டெக் HR ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் சுமார் 205 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக ஒமேகா சென்டர் ஆஃப் ஹோப் பயிற்சி நிறுவனத்தின் மண்டல இயக்குநர் மரிய ஜோசப் நன்றியுரை வழங்கி விழாவினை நிறைவு செய்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision