ஸ்ரீரங்கம் கோவிலில் 81 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை

ஸ்ரீரங்கம் கோவிலில் 81 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியலை கோவில் இணை ஆணையர்  மாரிமுத்து  முன்னிலையில் அறநிலையத்தறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும்  தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று (26.04.2023) எண்ணப்பட்டது.

உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 81,71 ,112 ரூபாயும், தங்கம் 179 கிராம், வெள்ளி 1524  கிராம்   மற்றும் 361 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றுள்ளதாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn